‘பிசாசுகளை விரட்டுவதற்காக’ மகளைக் கொன்ற தாய்க்குச் சிறை

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் தனது மூன்று வயது மகளைக் கொன்ற தாயாருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறுமிக்குள் இருக்கும் ‘பேய்களை விரட்டுவதற்காக’ அவளது தாயார் வெப்பமிகுந்த கார் ஒன்றுக்குள் தனது மகளைப் பத்து மணி நேரமாகத் தன்னந்தனியே விட்டார்.

மையா என்ற அந்தச் சிறுமியின் மரணம் ஜூன் மாதத்தில் உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்பில் ஏஞ்சலா பாக்கின் என்ற அந்தத் தாயார் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவருக்குக் கடந்த வெள்ளிக்கிழமை தண்டனை விதிக்கப்பட்டது.

பாக்கினைத் திருமணம் செய்யவிருந்த உன்ட்வான் ஸ்மித்தும் இந்தச் சம்பவத்தின் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டில் இந்தத் தம்பதியர் ஆர்கன்சா மாநிலத்திலிருந்து கலிஃபோர்னியாவுக்குக் குடிபெயர்ந்தனர். வீடு இல்லாத அவர்கள் தங்கள் காரிலேயே தங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2017ஆம் ஆண்டில் அவர் பலமுறை மையாவை அதிக வெப்பமிகுந்த சூழல்களுக்கு உட்படுத்தியுள்ளனர். அந்தச் சிறுமியிடமிருந்து ‘காமாந்தகப் பிசாசுகளை’ அகற்ற தாங்கள் இவ்வாறு செய்ததாகத் தம்பதியர் போலிஸ் விசாரணையின்போது தெரிவித்தனர். காரின் பின்னிருக்கையில் கம்பளத்தால் போர்த்தப்பட்ட மையா உயிரிழந்ததை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உறுதி செய்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!