சிலாங்கூர்: வீட்டின் வரவேற்பு அறைக்குள் புகுந்து கொள்ளை அடித்த மூன்று பேரை போலிசார் கைது செய்திருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி, சமூக ஊடகங்களில் தீயாகப் பரவி வருகிறது. சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பண்டார் சௌஜன புத்ரா நகரில் உள்ள அந்த வீட்டின் வரவேற்பறையில் எட்டுப் பேர் ஓய்வாக அமர்ந்துகொண்டிருந்தபோது திடீரென மூகமுடிகளை அணிந்திருந்த மூன்று மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைவதைக் கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் நீளமான அந்தக் காணொளி காட்டுகிறது.
(நன்றி: தமிழர் ஊடகம் ஃபேஸ்புக் பக்கம்)
கையில் அரிவாளை வைத்துக்கொண்டிருந்த அம்மூவர், 12 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்ட அந்த இந்திய இன குடும்பத்தினரை வலுக்கட்டாயமாக ஓர் அறைக்குள் போக வைத்தனர். ஜூலை மாதம் 13 ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்ததாக நகர போலிசார் தெரிவித்தனர். சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்று போலிசார் கூறினர்.