துப்பாக்கிச்்சூட்டு சம்பவங்களை ஆதரித்த இளைஞர் கைது

வாஷிங்டன்: துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை ஆதரித்து இணையத்தில் கருத்து தெரிவித்துவந்த இளைஞர் ஒருவரை அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஜஸ்டின் ஒல்சன் என்ற 18 வயது இளைஞர் ஒஹையோ மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் கூறினர்.

சட்ட அமுலாக்க அதிகாரி ஒருவரை தாக்கப்போவதாக அவர் இணையப் பக்கத்தில் மிரட்டல் விடுத்தது தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறினர். அந்த இளைஞர் ஏற்கெனவே துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை ஆதரித்து இணையத்தில் கருத்து தெரிவித்திருந்ததாக புலனாய்வுத் துறை அதிகாரிகள் கூறினர். அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது தந்தை வீட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது 25 துப்பாக்கிகளும் 1,000 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இணையப்பக்கத்தில் கருத்து தெரிவித்ததை ஒப்புக்கொண்ட அந்த இளைஞர் நகைச்சுவைக்காக அவ்வாறு கருத்து தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!