வாஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தேவை என்று அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினர் செனட் சபையில் வலியுறுத்தியுள்ளனர். துப்பாக்கிகள் பயங்கரவாதிகளின் கைகளில் கிடைக்காமல் இருக்க துப்பாக்கி வைத்திருப்பவர்களின் பின்னணி பற்றி அறிய துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அமெரிக்க- மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கு செலவு செய்யப்படும் பணத்தை அமெரிக்காவில் பயங்கரவாதத்தை ஒழிக்க பயன்படுத்தலாம் என்றும் ஜனநாயகக் கட்சியினர் யோசனை தெரிவித்துள்ளனர். எல்லைச் சுவர் எழுப்ப 5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி தற்போது தேவைப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் கேட்டுக்கொண்டிருந்த நிலையில் அந்த கோரிக்கையை கைவிடுமாறு டிரம்ப் நிர்வாகத்தை கேட்டுக்கொள்ளவிருப்பதாக செனட் ஜனநாயகக் கட்சித் தலைவர் சுக் ஸ்குமர் கூறியுள்ளார்.