ஜப்பானில் வீசும் பலத்த புயல் காற்று; நிலச்சரிவுகள் ஏற்படும் ஆபத்து

தோக்கியோ: ஜப்பானின் மேற்குப் பகுதியில் பலத்த புயல்காற்று வீசுவதுடன் கனமழையும் தொடர்ந்து பெய்து வருவதால் நேற்றும் விமான, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். குரோசா எனும் புயல் நேற்று காலை ஷிகோகு மற்றும் கூசுத் தீவுகளை நோக்கி வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரவித்தது.

இந்த புயல் காற்றினால் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்றும் ஆறுகளில் நீர் நிரம்பி ஆற்றுநீர் பெருக்கெடுத்து ஓடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். கடல் அலைகளின் சீற்றம் அதிகரித்திருப்பதால் படகுச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 600 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கருதி 550,000 பேரை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.புயல் காற்றில் சிக்கி நான்கு பேர் காயம் அடைந்ததாகவும் ஆற்றோரத்தில் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறுவர்கள் 18 பேர் ஆற்றுநீர் பெருக்கெடுத்து ஓடியதால் தவிக்க நேர்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!