ஜிப்ரால்டர்: ஈரானிய எண்ணெய் கப்பலான கிரேஸ் 1ஐ பறிமுதல் செய்ய அமெரிக்கா ஆணை பிறப்பித்துள்ளது.
மெடிடரேனியன் கடற்பகுதியில் இருந்த அந்தக் கப்பல் சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு செல்வதாகச் சந்தேகிக்கப்பட்டது.
இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை அக்கப்பல் மீறியதாக சந்தேகம் எழுந்ததால் கடந்த ஜூலை மாதம் 4ஆம் தேதியன்று பிரிட்டிஷ் கடற்படையினர் அக்கப்பலை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், ஜிப்ரால்டர் கடற்பகுதியில் நங்கூரமிட்டிருக்கும் அக்கப்பலைப் பறிமுதல் செய்ய அமெரிக்கா ஆணை பிறப்பித்துள்ளது. அந்தக் கப்பல் ஜிப்ரால்டர் கடற்பகுதியை விட்டு செல்லாதிருக்க அமெரிக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கிரேஸ் 1 கப்பல் சிரியாவுக்குச் செல்லாது என ஈரானிய அரசாங்கம் எழுத்துபூர்வமாக உறுதி அளித்த பிறகு பிரிட்டனின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஜிப்ரால்டரைவிட்டு அக்கப்பல் செல்லலாம் என அதன் முதலமைச்சர் கடந்த வியாழக்கிழமையன்று அனுமதி வழங்கினார்.
2.1 மில்லியன் எண்ணெய் தோம்புகளுடன் இருக்கும் கிரேஸ் 1 கப்பல் ஜிப்ரால்டரை விட்டு வெளி
யேற இருந்தபோது அமெரிக்கா அதற்கு எதிராக பறிமுதல் ஆணையைப் பிறப்பித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிப் படையுடன் அக்கப்பலுக்குத் தொடர்பு இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. ஈரானின் புரட்சிப் படையைப் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா கருதுகிறது.
பனாமா கொடியின்கீழ் பயணம் செய்த கிரேஸ் 1ன் பெயர் ஏட்ரியன் டார்யாவாக மாற்றப்பட்டு ஈரானிய கொடியின்கீழ் பயணம் செய்யும் என்றும் அதனைத் தொடர்ந்து அது மெடிடரேனியன் கடற்குதிக்குச் செல்லும் என்றும் ஈரான் தெரி வித்துள்ளது.2019-08-18 06:00:00 +0800