தனது இரண்டு ஆண் குழந்தைகளைச் சுட்ட தந்தை, துப்பாக்கியால் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். தாய்லாந்தின் சியாங் மாய் மாநிலத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. அந்த இரண்டு குழந்தைகளில் மூத்தவனான மூன்று வயது பிச்சாப்ஹொப் சேயாங் உயிரிழந்தான். அவனது தம்பியான ஒரு வயது சாட்சவால் சேயாங் கவலைக்கிடமாகக் காயமடைந்தார். ஆயினும் அவனது உயிருக்கு இப்போது ஆபத்தில்லை என்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவன் தற்போது குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அந்த 27 வயது ஆடவரின் மனைவி மற்றொருவரை மணப்பதற்காக அவரையும் அவர்களது பிள்ளைகளையும் விட்டுப் பிரிந்ததால் அந்த ஆடவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாக தாய்லாந்து போலிசார் கூறுகின்றனர்.
தனது இரண்டு மகன்களையும் வரிசையில் நிற்க வைத்து அந்த ஆடவர் சுட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.