ஹாங்காங்கில் வாரயிறுதியின்போது அமைதியான முறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், அங்கே அமைதியை மீண்டும் நிலைநாட்டுவதற்கான முயற்சியின் தொடக்கம் என நம்புவதாக அதன் தலைமை நிர்வாகி கேரி லாம் தெரிவித்திருக்கிறார்.
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என்று உறுதியளித்த திருவாட்டி லாம், போலிசாருக்கு எதிரான வன்முறை புகார்களும் முறையாக விசாரிக்கப்படும் என்று சொன்னார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹாங்காங்கில் பெய்த கனமழையைப் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளுக்குக் குரல்கொடுத்தனர். 11 வாரமாகத் தொடரும் இந்த ஆர்ப்பாட்டத்தால் ஹாங்காங் தனது உரிமைகளை இழக்க நேரிடலாம் என அஞ்சப்படுகிறது.