ஸாகிர் நாயக்கின் நிரந்தரவாசத் தகுதி: அதிகாரிகள் முடிவெடுப்பர்

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகிர் நாயக்கின் நிரந்தரவாசத் தகுதியை ரத்து செய்வதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் முடிவை அதிகாரிகளிடம் விட்டுவிடுவதாக மலேசியாவின் பிகேஆர் கட்சி அறிவித்துள்ளது.

சட்டவிரோதப் பணப் பரிவர்த் தனைக்காக இந்தியாவால் தேடப் பட்டு வரும் ஸாகிர் நாயக், நிரந்தரவாசத் தகுதியுடன் மலேசியாவில் வசித்து வருகிறார். இந்நிலையில், மலேசியாவில் வாழும் பிற சமயத்தவரைத் தாக்கியும் பிரிவினையைத் தூண்டும் வகையிலும் அவர் பேசியதாக எழுந்த புகாரை அடுத்து, அவரை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனக் குரல்கள் கிளம்பியுள்ளன.

இதையடுத்து, நாட்டின் எந்தப் பகுதியிலும் பொதுமக்கள் மத்தியில் பேச ஸாகிருக்குத் தடை விதிக் கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரும் தமது பேச்சிற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், ஸாகிரின் நிரந்தரவாசத் தகுதியை ரத்து செய்வது தொடர்பாக பிகேஆர் கட்சி நேற்று கூடிப் பேசியது. அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் ஏற்பாட்டுச் செயலாளர் நிக் நஸ்மி நிக் அகமது, ஸாகிரின் நிரந்தரவாசத் தகுதியை தொடர்வதா இல்லையா என்பதை அதிகாரிகளே தீர்மானிப்பர் என்று தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!