ஈரானிய எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா வர்த்தகத் தடைகளைக் கடுமையாகச் செயல்படுத்தும்

மத்திய தரைக்கடல் வழியாகத் தற்போது சென்றுகொண்டிருக்கும் ஈரானிய எண்ணெய்க் கப்பலுக்கு எந்தத் தனியார் நிறுவனமும் உதவி செய்வதைத் தடுக்க அமெரிக்கா தனது வர்த்தகத் தடைகளை மேலும் கடுமையாகச் செயல்படுத்தவுள்ளது.

“அமெரிக்காவின் வர்த்தகத் தடைகளை நாங்கள் கடுமையாகச் செயல்படுத்துவோம் என்று கப்பல் துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சின் அதிகாரி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) கூறினார்.

முன்னதாக ‘கிரேஸ்-1’ என அழைக்கப்பட்ட ‘ஏட்ரியன் தர்யா’ என்ற அந்தக் கப்பல், ஜிப்ரால்டார் நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. ஆயினும் அதனை கிரேக்க பிரதமர் மறுத்துள்ளார்.

“அந்த எண்ணெய்க் கப்பலுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எவரேனும் உதவி செய்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் அந்த அதிகாரி.

ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகத் தடைகளுக்குப் புறம்பாக, சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு செல்ல முயன்ற குற்றச்சாட்டின் பேரில் அந்தக் கப்பல் ஜிப்ரால்டாரில் கடந்த மாதம் தடுக்கப்பட்டது. சென்ற வாரம் ஜிப்ரால்டாரின் நீதிமன்றம் அந்தக் கப்பலை விடுவித்தது.

இதற்கிடையே ஈரான் கடந்த மாதம் கைப்பற்றிய ‘ஸ்டெனா இம்பெரோ’ என்ற பிரிட்டிஷ் கப்பல் விடுவிக்கப்படும் என்று சுவீடனின் தொலைக்காட்சி ஊடகம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!