ஜப்பான் பிரதமர்: தென்கொரியா நம்பிக்கையை சீர்குலைக்கிறது

தோக்கியோ: ராணுவ உளவுத்துறையைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்வது என்ற தென்கொரியாவின் முடிவு பரஸ்பர நம்பிக்கையை சீர்குலைப்பதாகக் கூறியுள்ளார் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே.

மேலும் வட்டார அமைதிக்காக அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றப் போவதாகவும் அவர் உறுதியளித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒப்பந்தம் கடந்த 2016ல் தொடங்கியது.

ஜி7 மாநாட்டிற்குப் புறப்படுவதற்கு முன்னர் பேசிய அவர், “வட்டார அமைதிக்காகவும் ஜப்பானின் பாதுகாப்பிற்காகவும் அமெரிக்காவுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவோம்,” என்று அவர் சொன்னார்.

முன்னுரிமை வர்த்தகப் பட்டியலில் இருந்து தென்கொரியாவை நீக்கும் ஜப்பானின் முடிவைத் தொடர்ந்து, ராணுவ ஒத்துழைப்பில் இருந்து பின் வாங்குவதாக தென்கொரியா கூறியுள்ளது.

1910 முதல் 1945ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் ஜப்பானின் காலனித்துவ ஆதிக்கத்தின் போது, தென்கொரிய மக்களின் கட்டாய உழைப்பிற்காக, 1965ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி இழப்பீடு கொடுத்துவிட்டதாகக் கூறிவருகிறது ஜப்பான்.

ஆனால், தென்கொரிய நீதிமன்றமோ பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஜப்பான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!