கோலாலம்பூர்: மலேசியாவில் ஆக அதிக அளவிலாக 3.7 டன் எடை கொண்ட போதைப்பொருட்களைக் கைப்பற்றியதாக மலேசிய போலிசார் நேற்று கூறினர்.
கடந்த சில ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் ஆக அதிக அளவாக இது கருதப்படுகிறது.
இதன் மதிப்பு சுமார் 161 மில்லியன் அமெரிக்க டாலர் (223.3 மில்லியன் வெள்ளி) என்றும் போலிசார் கூறியுள்ளனர்.
கடந்த 18ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது புன்காக் ஆலம் பகுதியில் உள்ள கடைவீடு ஒன்றில் சாக்குகளில் இருந்த 467 கிலோ கெட்டமைன் என்ற போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் துறை இயக்குநர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை
யில் இன்னொரு கடையிலிருந்த 3,200 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
கெட்டமைன் பாகிஸ்தானில் இருந்தும் கொக்கைன் எக்வேடாரில் இருந்தும் வந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் சொன்னார்.