செர்டாங்: மலேசியாவின் செர்டாங் பெர்டானா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 5 கிலோ எடையுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இதுதொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செர்டாங் போலிசார் கூறினார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு சுமார் 200,000 ரிங்கட் என்று கூறப்படுகிறது. “கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கெனவே போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டு கள் உள்ளன. வரும் 30ஆம் தேதி வரை அவர்களைக் காவலில் வைக்க நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது. “மலேசியா-தாய்லாந்து எல்லையில் அவர்கள் போதைப்பொருளை கைமாற் றியபோது பிடிப்பட்டனர்,” என்று போலிஸ் கூறியது.