முன்னாள் அதிபர் மீது வழக்கு

முன்னாள் அதிபர் மீது வழக்கு

1 mins read
bc164d94-779a-4867-8da5-c9116fca91fd
சூடானிய அதிபர் ஓமர் அல்-பஷீர். (படம்: ராய்ட்டர்ஸ்) -

சூடான்: சூடானில் கடந்த 23 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த ஓமர் அல் பஷீர், கடந்த ஏப்ரல் மாதம் பதவியை இழந்த பிறகு, ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், ஓமர் அல் பஷீர் தனது வீட்டில் 69 லட்சம் யூரோக்கள், 3 லட்சத்து 51 ஆயிரத்து 770 அமெரிக்க டாலர்கள், 57 லட்சம் சூடான் பவுண்டுகளை முறைகேடாக பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.