வங்கிக் கணக்கில் தவறுதலாகப் போடப்பட்ட US$120,000; செலவிட்ட தம்பதிமீது திருட்டுக் குற்றச்சாட்டு

வங்கி ஊழியர் செய்த பிழையால், ராபர்ட் வில்லியம்ஸ், டிஃபானி வில்லியம்ஸ் தம்பதியரின் பிபி&டி வங்கிக் கணக்கில் US$120,000 போடப்பட்டது. தங்களுடைய பணம் இல்லை என்று தெரிந்த பிறகும் சுமார் இரண்டரை வாரங்களுக்குள் அதில் US$100,000ஐ செலவு செய்துவிட்டதால் அவர்கள் மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் மொன்டுவர்ஸ்வில் நகரைச் சேர்ந்த இந்தத் தம்பதியர், அந்தப் பணத்தைக் கொண்டு மூன்று வாகனங்கள் வாங்கியதுடன், பணம் தேவைப்பட்ட நண்பர்களுக்கு US$15,000 கொடுத்தனர்.

வங்கி அதன் பிழையைச் சரிசெய்து சரியான கணக்குக்குப் பணத்தை அனுப்பிய பிறகு, ஜூன் 20ஆம் தேதிவாக்கில் தம்பதியருடன் தொடர்பு கொண்டது.

செலவழித்த பணம் முழுவதையும் திருப்பித் தருவது அவர்களது பொறுப்பு என 35 வயது டிஃபானியிடம் வங்கி தெரியப்படுத்தியது.

பணத்தைத் திருப்பிக்கொடுக்க தனது கணவருடன் சேர்ந்து ஏற்பாடு செய்வதாக வங்கியிடம் ஆரம்பத்தில் உறுதியளித்த டிஃபனியுடன் பிற்பாடு தொடர்புகொள்ள இயலாமல் போய்விட்டது என வில்லியம்ஸ்போர்ட் சன்-கெசட் இதழிடம் காவல்துறை அதிகாரி ஆரன் பிரவுன் தெரிவித்தார். நீதிமன்றத்தில் முன்னிலையான தம்பதி பிணை கோரினர்.

தவறுதலாகப் பணம் போடப்படுவதற்குமுன் தம்பதியரின் வங்கிக் கணக்கில் US$1,121 டாலர் மட்டுமே இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!