தோக்கியோ: 2011ஆம் ஆண்டில் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி காரணமாக செயலிழந்த ஃபுக்குஷிமா அணுசக்தி ஆலையில் உள்ள மாசடைந்த நீரைக் கடலில் விடவேண்டி வரும் என்று ஜப்பானின் சுற்றுப்புற அமைச்சர் யோஷியாக்கி ஹராடா தெரிவித்துள்ளார்.
ஆலையில் உள்ள குழாய்களிலிருந்து ஒரு மில்லியன் டன்னுக்கும் மேற்பட்ட மாசடைந்த நீர் சேகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
2022ஆம் ஆண்டுக்குள் அந்த ஆலையில் நீர் சேமிக்க இடம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாசடைந்த நீரைக் கடலில் விடுவது குறித்து ஜப்பான் அரசாங்கம் கலந்துபேசி ஒரு முடிவுக்கு வரும் என்றார் திரு ஹராடா. இதுகுறித்து ஆலையின் அதிகாரிகள் கருத்து தெரிவிக்கவில்லை.