தேசிய பாதுகாப்பு ஆலோசகரைப் பதவியிலிருந்து நீக்கிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டனை பதவியிலிருந்து திடீரென வெளியேற்றினார். வடகொரியா, ஈரான், ஆப்கானிஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகளுடன் தொடர்புடைய வெளியுறவுக் கொள்கைகள் குறித்து திரு போல்ட்டனுக்கும் திரு டிரம்ப்புக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாகத் திரு டிரம்ப் இந்த முடிவுக்கு வந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

“வெள்ளை மாளிகையில் அவரது சேவை இனி தேவைப்படாது என்று நான் ஜான் போல்ட்டனிடம் கடந்த இரவு தெரிவித்தேன். அவரது பரிந்துரைகள் பலவற்றை நானும் எனது நிர்வாகத்தினரும் வன்மையாக எதிர்க்கிறோம்,” என்று செவ்வாய்க்கிழமை திரு டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்தார். திரு போல்ட்டனுக்குப் பிறகு பதவிக்கு வருபவரின் பெயர் அடுத்த வாரம் வெளியிடப்படும் என டிரம்ப் கூறினார்.

போரை அதிகமாகச் சார்ந்த வெளியுறவுக் கொள்கையைக் கொண்டுள்ள திரு போல்ட்டன், ஈரானியத் தலைவர்களைத் திரு டிரம்ப் சந்திப்பதைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். அத்துடன் ரஷ்யா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு எதிராக மேலும் கடுமையான வெளியுறவுக் கொள்கைளுக்குத் திரு போல்ட்டன் குரல்கொடுத்து வருகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!