வடகிழக்கு தாய்லாந்தில் வெள்ளம்: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

பேங்காக்: தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அங்குள்ள வீடுகள், சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இதனால் 23,000க்கும் மேற்பட்டோர் துயர் துடைப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு போதுமான உதவி செய்வதில் தாய்லாந்து அரசாங்கம் மெதுவாகச் செயல்படுவதாகக் கூறி அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக தாய்லாந்தில் கனமழை பெய்து வருகிறது. அதனால் பல மாநிலங்களில் திடீர் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

கடந்த மாதம் 29ஆம் தேதியிலிருந்து வெள்ளம் காரணமாக 32 பேர் மாண்டுவிட்டதாக தாய்லாந்தின் பேரிடர் துறை தெரிவித்துள்ளது.

வீடுகளுக்குள் புகுந்துள்ள வெள்ள நீர் வடிய மூன்று வாரங்கள் எடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!