அன்வார்: உரிய நேரத்தில் மகாதீர் பதவி விலகுவார்

மலேசியாவின் ஆளும் கூட்டணித் தலைவர் அன்வார் இப்ராகிம் அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் இன்று (செப்டம்பர் 18) புளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் இதனைக் குறிப்பிட்ட அவர், உரிய நேரத்தில் டாக்டர் மகாதீர் முகமது பிரதமர் பதவியிலிருந்து விலகுவார் என்ற புரிந்துணர்வு இருக்கிறது என்றார்.

தமக்குப் பதிலாக மலேசியப் பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி அல்லது பிரதமர் மகாதீரின் மகன் திரு முக்ரிஸ் மகாதீர் ஆகியோருக்கு பிரதமர் பதவி வழங்கப்படலாம் என்பதை 72 வயதான திரு அன்வார் மறுத்தார்.

இந்தோனீசியாவின் காட்டுத்தீ காரணமாக மலேசியாவில் புகைமூட்டம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது தொடர்பான கேள்விக்கு, “நாம் சீற்றம் கொள்ளவேண்டும். இதனை ஒரு சுற்றுச்சூழல் போர் எனக் கருதுகிறேன்,” என்றார் திரு அன்வார்.

மில்லியன் கணக்கானோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்நிலைக்குக் காரணமான நிறுவனங்கள் பாதிப்புக்குப் பொறுப்பேற்கும் விதத்தில் அரசாங்கங்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நியாயமான பொருளியல் பங்கீடு, ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை அரசாங்கக் கொள்கைகள் உறுதிப்படுத்த வேண்டும் என்ற திரு அன்வார், கீழறுப்புச் சட்டத்தைச் சீர்படுத்த வேண்டும் என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!