சத்து ஊசி போட்டுக்கொள்வதற்காக மகப்பேறு அறைக்குள் நுழைந்த கர்ப்பிணி ஒருவருக்குத் தவறுதலாகக் கருக்கலைப்பு சிகிச்சை செய்த மகப்பேறு மருத்துவர், தாதி ஆகியோர் மீது சோல் கேங்சியோ காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வியட்னாமைச் சேர்ந்த மாது ஒருவர் ஆறு வார கர்ப்பத்துடன் கடந்த மாதம் 7ஆம் தேதி மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றார். அவருக்குச் சத்து ஊசி போட மருத்துவர் பரிந்துரைத்ததை அடுத்து அவர் மகப்பேறு அறைக்குச் சென்றார். அதே அறையில்தான் ஊசி போடுதல், அறுவை சிகிச்சை போன்றவையும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
பெண்ணின் தகவல்களைச் சரிவர கவனிக்காமல் கர்ப்பிணிக்குத் தாதி ஒருவர் மயக்க ஊசி போட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மகப்பேறு மருத்துவர் கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்பட்டது.
வேறொரு பெண்ணுக்குச் செய்ய வேண்டிய கருக்கலைப்பு சிகிச்சை இந்தப் பெண்ணுக்குச் செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து போலிசில் புகார் அளிக்கப்பட்டது.
பெண்ணின் விருப்பமின்றி கருக்கலைப்பு செய்யப்பட்டது கருத்தில் கொள்ளப்பட்டாலும், மயக்க நிலையில் இருந்ததால் அந்தப் பெண் சம்மதம் தெரிவிக்கவுமில்லை, மறுக்கவுமில்லை என்ற அடிப்படையில் மருத்துவரையும் தாதியையும் கைது செய்ய முடியாத நிலை இருப்பதாக போலிஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, தென்கொரியாவில் கருக்கலைப்பு சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது.
கர்ப்பிணியின் கருவை தவறுதலாகக் கலைத்த மருத்துவர்
24 Sep 2019 13:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!