நீர்வீழ்ச்சிக்குள் விழுந்து இறந்த யானைகளின் எண்ணிக்கை 11க்கு உயர்வு

தாய்லாந்திலுள்ள ஒரு நீர்வீழ்ச்சியில் மொத்தம் 11 யானைகள் விழுந்து இறந்ததாக ஆளில்லா வானூர்திப் படங்கள் காட்டுகின்றன. இந்தச் சம்பவத்தில் இறந்த யானைகளின் எண்ணிக்கை முன்னதாக ஆறு எனப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

கடந்த வாரயிறுதியின்போது தாய்லாந்தின் வடகிழக்கிலுள்ள ஹுாவ் நரோக் நீர்வீழ்ச்சியில் ஆறு யானைகள் விழுந்து மடிந்ததாக தேசிய பூங்காக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த யானைக் கன்று ஒன்றுக்கு ஆற்றங்கரையில் இருந்த இரண்டு யானைகள் நீருக்குள் இறங்கி உதவ முயன்றபோதும் முடியவில்லை . அந்த யானைகள் அதிஷ்டவசமாக உயிர்பிழைத்தன.

ஆளில்லா வானூர்தி ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட படங்களில் மேலும் ஐந்து யானைகளின் சடலங்கள் தென்பட்டதாக நகோன் நயோக் மாநில ஆளுநர் நுட்டாபோங் சிரிசனா தெரிவித்தார். ஆற்று நீரோட்டம் மிகவும் பலமாக இருப்பதால் தாங்கள் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் செல்ல இயலவில்லை என அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!