ஸ்டாக்ஹோம்: இவ்வாண்டு இலக்கியத்துக்கான நோபெல் பரிசு ஆஸ்திரிவைச் சேர்ந்த பீட்டர் ஹேன்ட்கேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு இலக்கியதுக்கான நோபெல் பரிசு போலந்தைச் சேர்ந்த ஓல்கா டோகார்சுக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபெல் தேர்வுக் குழுவின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டதால், கடந்த ஆண்டுக்கான இலக்கிய நோபெல் பரிசு இவ்வாண்டுடன் சேர்த்து வழங்கப்படும் என நோபெல் அறக்கட்டளை அறிக்கை கூறியது.
இலக்கியதுக்கான நோபெல் பரிசு பெறும் இலக்கிய வாதியைத் தேர்ந்தெடுத்து பரிந்துரைக்கும் பணியை சுவீடன் இலக்கிய அகாடமி மேற்கொண்டு வந்தது.

