விடுதலைப்புலிகள் விவகாரத்தில் பிகேஆர் கட்சியினர் கைதாகவில்லை: அன்வார்

மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்ததற்காக பிகேஆர் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த தகவலை அக்கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் மறுத்துள்ளார். கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் எழுவர் பிடிபட்டனர். அவர்களின் இருவர் ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள்.
ஆனால் இந்த விவகாரத்தில் தமது கட்சியினர் சம்பந்தப்படவில்லை என்று நேற்று பிகேஆர் மாநிலக்குழு கூட்டத்தைத் தொடங்கி வைத்தபோது செய்தியாளர்களிடம் திரு அன்வார் கூறினார்.

“புக்கிட் அமான் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் பிகேஆர் கட்சியின் இன்னாள், முன்னாள் உறுப்பினர்கள் எவரும் பிடிபட்டதாக எனக்குத் தகவல் இல்லை,” என்றார் அவர்.
எல்டிடிஇ தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்ததற்காக சனிக்கிழமை மேலும் ஐவர் கைது செய்யப்பட்டபோது அவர்களில் நால்வர் பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் பரவியது. எல்டிடிஇ முறியடிப்பு நடவடிக்கைக்கு சோஸ்மா சட்டம் பயன்படுத்தப்படுவதை வரவேற்ற திரு அன்வார், அதன் சில பகுதிகள் திருத்தப்பட வேண்டும் என்றார்.
இச்சட்டத்தின் சில அம்சங்களைத் தொடக்கம் முதலே நாங்கள் எதிர்த்து வருகிறோம். அந்த எதிர்ப்பு எல்டிடிஇ முறியடிப்பு உள்ளிட்ட மற்ற நடவடிக்கைகள் தொடர்பானதல்ல,” என்றார் அவர்.

எல்டிடிஇ வேறு; இலங்கைத் தமிழர்கள் வேறு

இதற்கிடையே, இலங்கைத் தமிழர்கள் மீது அனுதாபம் காட்டப்படுவது தவறில்லை என்றும் பயங்கரவாத அமைப்பு என்று வகைப்படுத்தப்பட்டு உள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை ஆதரிப்பது குற்றம் என்றும் மலேசியாவின் பயங்கரவாதத் தடுப்பு சிறப்புப் பிரிவின் துணைத் தலைமை ஆணையர் அயூப் கான் மைதின் பிச்சை கூறியுள்ளார். புக்கிட் அமான் போலிஸ் தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இலங்கையில் உள்ள தமிழர்கள் மீது தமக்கும் இரக்கம் உண்டு என்றார்.
அதேநேரம் மலேசியா மேற்கொண்டு வரும் கைது நடவடிக்கை இலங்கைத் தமிழருக்கு எதிரானது அல்ல என்றும் எல்டிடிஇ தொடர்பானது என்றும் இரண்டையும் சேர்த்துப் பார்த்து குழம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை இரண்டு சட்டமற்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏழு மலேசியர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்ததாகக் கைது செய்யப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம் மேலும் ஐவர் கைதாயினர். அந்த ஐவரும் மத்திய மலாக்கா மாநிலத்திலும் வடமாநிலமான பினாங்கிலும் காலை மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் பிடிபட்டதாக திரு அயூப் கூறினார்.

இந்நிலையில் எல்டிடிஇ தொடர்பு காரணமாக ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று மாநில தலைமை போலிஸ் ஆணையாள்ர மகமது கமாருதீன் முகமது டின் நேற்று கூறினார். அதேநேரம் இவ்விவகாரம் தொடர்பில் சிகாமாட்டில் உள்ள வீடு ஒன்றில் போலிசார் சோதனை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!