19 ஆண்டுகள் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு $7 மில்லியன் இழப்பீடு

சிட்னி: எந்தவொரு தவறும் செய்யாமல் ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஆஸ்திரேலிய சிறையில் கழித்த பொருளியல் நிபுணர் ஒருவருக்கு நேற்று இழப்பீடாக வழங்க A$7 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

1995ஆம் ஆண்டு போலிஸ் அதிகாரி கோலின் வின்செஸ்ட்டர் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் அரசாங்க ஊழியரான டேவிட் ஈஸ்ட்மனுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்கு பல முறை மேல் முறையீடு செய்தார் திரு டேவிட். கடைசியாக 2014ஆம் ஆண்டு அவரது வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நீதிமன்றம் வழக்கை விலக்கி டேவிட் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்து அவரை விடுவித்தது. ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றம் திரு டேவிட்டுக்கு இழப்பீடாக A$7 மில்லியன் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

“வேலை, வருமானத்தை இழந்ததுடன் எனக்கென ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை இழந்து விட்டேன்.

“அதைவிடப் பேரிழப்பாக நான் கருதுவது நான் சிறையில் இருக்கும்போது எனது தாய், சகோதரிகள் மரணம் அடைந்தனர்,” என்று நீதிமன்றத்தில் கண்ணீர்மல்கக் கூறினார் திரு டேவிட்.

அத்துடன் 2006ஆம் ஆண்டு சிறையில் இருக்கும்போது ஒரு கொலைக்குச் சாட்சியாக இருந்ததால் சக கைதியால் தாக்கப்பட்டால். அந்தத் தாக்குதலுக்குப் பின் அவருடைய ஒரு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!