மூன்று நாட்களுக்குக் காணாமல் போனவருக்கு உதவிய மணல் எழுத்து

மூன்று நாட்களுக்குக் காணாமல் போனவருக்கு உதவிய மணல் எழுத்து

1 mins read

சிட்னி: மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த ஆஸ்திரேலிய பெண் ஒருவர், உதவி கேட்டு மணலில் எழுதிய எழுத்துகளின் உதவியால் கண்டுபிடிக்கப்பட்டார். நண்பர்களுடன் காட்டுப் பகுதியில் முகாமிட்டபோது, அந்த 55 வயது பெண் மெதுநடைக்குச் சென்றதாகவும் அடர்ந்த புதர்களுக்கிடையே சிக்கித் தொலைந்து போனதாகவும் கூறப்பட்டது. தேடி மீட்கும் பணியில் இறங்கிய அதிகாரிகளுடன் ஒரு ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே தான் குடியிருக்காத வீடு அமைந்துள்ள நிலத்தைக் கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்துக்கொண்டிருந்த ஓர் ஆடவர், உதவி கோரி பெரிதாக மணலில் எழுதப்பட்ட 'எஸ்ஓஎஸ்' (SOS) எழுத்துகளைக்கொண்டு தொலைந்த பெண்ணைக் கண்டுபிடிக்க உதவியுள்ளார்.