மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள்

மெக்சிகோவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 311 இந்தியர்கள் அவர்களின் சொந்த நாட்டிற்குத் திருப்பியனுப்பப்பட்டனர்.

அனுமதியின்றி தொடர்ந்து தங்கியிருந்த அந்த இந்தியர்கள் டொலுக்கா நகர விமான நிலையத்தில் இருந்து போயிங் 747 விமானம் மூலமாக புதுடெல்லிக்கு அனுப்பப்பட்டதாக மெக்சிகோ குடிநுழைவு ஆணையம் நேற்று முன்தினம் அறிக்கை மூலம் தெரிவித்தது.

மெக்சிகோ எல்லை வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிடில் அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகள் உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடந்த ஜூன் மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன் எதிரொலியாகவே இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

மெக்சிகோவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அடையாளம் காணப்பட்டு அழைத்து வரப்பட்ட அந்த இந்தியர்கள், நாடு கடத்தப் படுமுன் வெராக்ரூஸ் மாநிலத்தில் உள்ள தடுப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!