சிங்கப்பூர் - ஜோகூர் பாரு எம்ஆர்டி ரயில் பதை திட்டத்துக்கு மகாதீர் ஒப்புதல்

சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையிலான எம்ஆர்டி ரயில் பாதை (ஆர்டிஎஸ்) அமைக்கும் பணியைத் தொடர மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், திட்டத்தின் அமலாக்கம் சற்று தாமதமாகும் என்று நேற்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ரயில் பாதைத் திட்டத்தின் தொடர்பில் மலேசிய அமைச்சரவை இரு வாரங்களுக்குள் முடிவு செய்யும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக் கூறியதைத் தொடர்ந்து மலேசியப் பிரதமரின் ஒப்புதல் வெளியாகியுள்ளது.

ஜோகூர் பாருவின் புக்கிட் சாகரில் ஜோகூர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தருக்குச் சொந்தமான நிலம் தொடர்பிலான பிரச்சினைகளை மலேசிய அரசாங்கம் தீர்த்துவிட்டதா என்று கேட்ட செய்தியாளர்களிடம் டாக்டர் மகாதீர் உறுதியான பதில் எதையும் குறிப்பிடவில்லை என்றும் அது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் கூறியதாகவும் மலேசியாக்கினி செய்தி இணையத்தளம் குறிப்பிட்டது.

ஜோகூர் பாருவின் புக்கிட் சாகர் நிலையத்துக்கும் சிங்கப்பூரில் அமைக்கப்படவுள்ள உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்துக்கும் இடையே ஆர்டிஎஸ் அமைக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!