விமானம் ஆட்டம்கண்டதால் லாகூரில் தங்கிய பிரிட்டிஷ் அரச தம்பதி

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம், அவரது துணைவியார் கேட் ஆகியோர் லாகூரில் ஓரிரவைக் கழிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.

பாகிஸ்தானுக்கு ஐந்து நாட்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் ஒவ்வொரு நாளின் நடவடிக்கைக்குப் பிறகு இஸ்லாமாபாத்துக்கு திரும்ப வேண்டும்.

நேற்று (அக்டோபர் 17) லாகூரில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்ற இருவரும் இஸ்லாமாபாத்துக்கு விமானம் மூலம் திரும்பிக்கொண்டிருந்தனர்.

லாகூரிலிருந்து இஸ்லாமாபாத்துக்கு விமானப் பயண நேரம் சுமார் 26 நிமிடங்கள் மட்டுமே. ஆனால், இடி, மின்னல் உட்பட மிகவும் மோசமான வானிலை காரணமாக அவர்கள் பயணம் செய்த விமானம் ஆட்டம்கண்டதுடன், இரண்டு முறை முயன்றும் இஸ்லாமாபாத்தில் தரையிறங்க முடியாமல் போனது.

அருகில் உள்ள ராவல்பிண்டி விமான நிலையத்திலும் இதே சூழல் நிலவியது. வேறுவழியின்றி விமானத்தை லாகூருக்கே திருப்பவேண்டியதாயிற்று.

இரண்டு மணி நேரம் நீடித்த இந்தப் பயணத்தின் முடிவில் தம்பதியர் லாகூரில் நேற்றிரவு தங்கினர். அதற்காக பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், அவர்கள் லாகூரில் தங்கியது பற்றிய செய்திகளை ஊடகங்களில் பரப்பவேண்டாம் என அவர்களுடன் இருந்த செய்தியாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

பயணத்தின் ஐந்தாவது நாளான இன்று காலை தம்பதியர் இஸ்லாமாபாத்துக்கு விமானம் மூலம் சென்று, திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்றனர். பிற்பகலில் அவர்கள் லண்டனுக்குப் புறப்படுவர் என்று கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!