பாதுகாப்புப் படையினரை விரட்டிய போதைப்பொருள் கும்பல்

பாதுகாப்புப் படையினரைச் சுற்றி வளைத்து, அவர்களிடமிருந்து போதைப்பொருள் கும்பல் தலைவனின் மகனைத் துப்பாக்கிக்காரர்கள் விடுவித்த சம்பவம் மெக்சிகோவின் குலியகான் நகரில் நிகழ்ந்துள்ளது. போதைப்பொருள் கடத்தலில் கோலோச்சி வரும் ‘சினலோவா’ கும்பலின் தலைவனான ‘எல் சாப்போ’ குஸ்மன் அமெரிக்காவில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறான். அவனுடைய 12 பிள்ளைகளில் ஒருவனான ஒவிடியோ குஸ்மன் ஒரு வீட்டில் பதுங்கி இருந்ததை அறிந்ததும் பாதுகாப்புப் படையினர் அவனைப் பிடிக்க முயன்றனர். ஆயினும், அக்கும்பலைச் சேர்ந்த பலர் துப்பாக்கிகளை ஏந்தியபடி பாதுகாப்புப் படையினரைச் சுற்றி வளைக்க, அவர்களுக்குள் துப்பாக்கிச் சண்டை நடந்தது. சாலைகளில் நின்றிருந்த வாகனங்களும் கொளுத்தப்பட்டன. மோதலில் உயிரிழந்த சிலரது உடல்கள் சாலைகளில் கிடந்ததைப் படங்கள் காட்டின. இறுதியில், பாதுகாப்புப் படையினரின் உயிரைக் காக்கும் பொருட்டு, குஸ்மனைப் பிடிக்கும் முயற்சி கைவிடப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!