பாதுகாப்புப் படையினரைச் சுற்றி வளைத்து, அவர்களிடமிருந்து போதைப்பொருள் கும்பல் தலைவனின் மகனைத் துப்பாக்கிக்காரர்கள் விடுவித்த சம்பவம் மெக்சிகோவின் குலியகான் நகரில் நிகழ்ந்துள்ளது. போதைப்பொருள் கடத்தலில் கோலோச்சி வரும் ‘சினலோவா’ கும்பலின் தலைவனான ‘எல் சாப்போ’ குஸ்மன் அமெரிக்காவில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறான். அவனுடைய 12 பிள்ளைகளில் ஒருவனான ஒவிடியோ குஸ்மன் ஒரு வீட்டில் பதுங்கி இருந்ததை அறிந்ததும் பாதுகாப்புப் படையினர் அவனைப் பிடிக்க முயன்றனர். ஆயினும், அக்கும்பலைச் சேர்ந்த பலர் துப்பாக்கிகளை ஏந்தியபடி பாதுகாப்புப் படையினரைச் சுற்றி வளைக்க, அவர்களுக்குள் துப்பாக்கிச் சண்டை நடந்தது. சாலைகளில் நின்றிருந்த வாகனங்களும் கொளுத்தப்பட்டன. மோதலில் உயிரிழந்த சிலரது உடல்கள் சாலைகளில் கிடந்ததைப் படங்கள் காட்டின. இறுதியில், பாதுகாப்புப் படையினரின் உயிரைக் காக்கும் பொருட்டு, குஸ்மனைப் பிடிக்கும் முயற்சி கைவிடப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்
பாதுகாப்புப் படையினரை விரட்டிய போதைப்பொருள் கும்பல்
19 Oct 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Oct 2019 08:42
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
ரவி மேனன் முதலாவது பருவநிலை நடவடிக்கைத் தூதராக நியமனம்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!