வாரயிறுதி போராட்டத்திற்கு ஆயத்தமாகும் ஹாங்காங்

ஹாங்காங்: அரசாங்கத்திற்கு எதிராக நான்கு மாதங்களாக ஹாங்காங்கில் நடைபெற்று வரும் போராட்டங்கள் இப்போதைக்கு முடிவுறுவதாகத் தெரியவில்லை.

முக்கியமான மெட்ரோ ரயில் தடங்களில் நேற்று மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நாளை பெரிய அளவிலான ஜனநாயகப் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இரு வாரங்களுக்கு முன் முகக்கவசம் அணியத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதன்பின்னரே போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த புதன்கிழமை மனித உரிமை ஆர்வலர் ஜிம்மி ஷேம் கொடூரமாகத் தாக்கப்பட்டது ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தி, வன்முறையைத் தூண்டும் முயற்சி என விமர்சிக்கப்பட்டது.

இதனிடையே, ஹாங்காங் தலைவர் கேரி லாம் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் பலரும் கோரியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!