மலேசியாவின் பேராக் மாநிலத்தின் ஈப்போ நகரில் இரண்டு சகோதரிகள் நீர் நிரம்பிய கால்வாய்குள் மூழ்கி உயிரிழந்தனர்.
உதவிக்கான அழைப்பு இன்று பிற்பகல் 12.49 மணிக்கு போலிசாருக்குக் கிடைத்தது.
அலூர் போங்சுவில் உள்ள அந்தக் கால்வாய், சிறுமிகளின் வீட்டுக்கு மிகவும் அருகில் இருந்ததாக உள்ளூர் தீயணைப்புத் துறை பேச்சாளர் தெரிவித்தார். அவர்களது சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக பாரிட் புந்தார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

