தாம் கொளுத்திப்போட்ட பட்டாசின்மீதே வழுக்கி விழுந்து மலேசியர் மரணம்

வீட்டுக்கு வெளியில் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்த 25 வயது மலேசியரான பி.புவனேஸ்வரன், தாம் கொளுத்திப்போட்ட பட்டாசின் மீதே வழுக்கி விழுந்ததில், பலத்த வெடிப்பு ஏற்பட்டது.

அந்த வெடிப்பின் காரணமாக அவரது முகத்திலும் உடலிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. கூலாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டதாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

மேல் சிகிச்சைக்காக ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா அமினா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட புவனேஸ்வரன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட, உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் கூடியிருந்த வேளையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் சோகத்தில் முடிந்தது.

சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த புவனேஸ்வரன் கலகலப்பானவர் என்று கூறப்பட்டது.

சம்பவத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!