கரப்பான்பூச்சியை அழிக்க பெட்ரோல் குண்டு

கரப்பான்பூச்சியை அழிப்பதற்காக வீட்டுத் தோட்டத்துக்கே ஒருவர் பெட்ரோல் குண்டு வைத்த ருசிகர சம்பவம் பிரேசிலில் நிகழ்ந்துள்ளது. ஆனால், அதற்கும் அசராமல் கரப்பான்பூச்சி தப்பியதே சம்பவத்தின் சிறப்பு.

சீசர் ஸ்மித்ஸ் என்பவர், தம் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகம் இருந்ததால் அவற்றை அழிக்க பல்வேறு முயற்சிகள் எடுத்தார். அவை பயனற்றுப் போகவே, கரப்பான்பூச்சிகள் தங்கியிருந்ததாக நம்பப்பட்ட குழிக்குள் பெட்ரோலை ஊற்றி தீவைத்தார்.

அதனையடுத்து அவரே அஞ்சி ஓடும் வண்ணம் பலத்த சத்தத்துடன் வெடிப்பு நிகழ்ந்தது. ஆனால், அதெற்கெல்லாம் அசராமல் கரப்பான்பூச்சி அவரது காலடிக்கு அருகிலேயே தப்பி ஓடியதும் காணொளியில் (19வது வினாடியில்) பதிவாகியுள்ளது.

ஆயினும் தோட்டம் மீண்டும் சுத்தப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கரப்பான்பூச்சிகளின் தொல்லை குறைந்திருப்பதாகவும் சீசர் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!