'உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கிய முன்னேற்றம்'

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியின் மரணம், உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கிய முன்னேற்றம் என சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியிருக்கிறது.

அமெரிக்க சிறப்புப் படையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) சிரியாவில் நடத்திய அதிரடி நடவடிக்கையின்போது பாக்தாதி கொல்லப்பட்டார்.

பயங்கரவாதம் சிங்கப்பூர் உட்பட உலகெங்கிலும் தொடர்ந்து கடுமயான மிரட்டலாக நிலவி வருவதாக அமைச்சு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 29) வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

“ஐஎஸ் அமைப்பை முறியடிக்க முற்படும் உலகக் கூட்டணியின் உறுப்பினர் என்ற முறையில், ஐஎஸ் அமைப்பு உட்பட, உலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் சிங்கப்பூர் தொடர்ந்து கடப்பாடு கொண்டிருக்கிறது,” என அமைச்சின் பேச்சாளர் அறிக்கையில் குறிப்பிட்டார். சிங்கப்பூர் 2014 நவம்பர் மாதம் இந்தக் கூட்டணியில் சேர்ந்தது.

பாக்தாதியின் மரணத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தொலைக்காட்சியில் அறிவித்தார். அமெரிக்கப் படையினர் சுற்றிவளைத்தபோது, வெளியேற வழியில்லாத சுரங்கத்திற்குள் தப்பிச்சென்ற பாக்தாதி, தான் அணிந்திருந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்து தற்கொலை செய்து கொண்டதாக டிரம்ப் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!