கிளர்ச்சி படையிடம் சிக்கிய இந்திய ஊழியர் மரணம்

யங்கூன்: மியன்மாரில் உள்ள ரக்கைன் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய இந்தியாவின் கட்டுமான ஊழியர் ஒருவர் இறந்துவிட்டார் என்று ராக்கைன் மாநில அதி காரிகளும் கிளர்ச்சியாளர்களும் தெரி வித்தனர்.

அண்மைய வாரங்களாக அரக்கான் கிளர்ச்சி ராணுவம் உத்திகளை மாற்றி செயல்பட்டு வருகிறது. அதன்படி சாலையோர, ஆற்றோரமுள்ள மக்களை கொத்து கொத்தாக பிணைப் பிடித்து வருகிறது.

இதே மாகாணத்தில்தான் இந்தியாவையும் மியன்மாரையும் இணைக்கும் பல்வேறு உள் கட்டமைப்புத் திட்டங்கள் மேற் கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில் முதல் முறை யாக அங்கு பணியாற்றிய வெளி நாட்டு ஊழியர்களை அரக்கான் ராணுவம் கடத்திச்சென்றது.

மொத்தம் பத்து பேர் அவர்களிடம் சிக்கியிருப்பதாகக் கூறப்பட்டது. இவர்களில் ஐந்து பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

மற்றொருவர், ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர். மலை மீது ஏறியபோது 60 வயது இந்திய ஊழியர் இறந்து விட்டதாக கிளர்ச்சி படையினர் கூறினர்.

“நாங்கள் எதுவும் செய்ய வில்லை. மலையேறியபோது அவ ரால் முடியாமல் இறந்துவிட்டார், இந்தியர்களை குறி வைப்பது எங்களுடைய திட்டமல்ல,” என்று அரக்கான் ராணுவத்தின் பேச்சாளர் ஒருவர் சொன்னார்.

இதற்கிடையே நாடாளுமன்ற உறுப்பினரைத் தவிர மற்றவர்களை கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளனர். ரக்கைன் மாநிலத்தில் ரக்கைன் பௌத்த இன மக்களுக்கு தன்னாட்சி வழங்க வேண்டும் என்று கோரி அரக்கான் ராணுவம் போராடி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!