ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கைது

ஹாங்காங்: அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமளி தொடர்பில் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களான மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று ஹாங்காங் போலிசார் தெரிவித்தனர்.

ஏற்கெனவே வார இறுதி ஆர்ப்பாட்டங்களால் ஹாங்காங் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இந்த நிலையில் போலிசாரின் கைது நடவடிக்கை மேலும் பதற்றத்தை அதிகரிக்க வைத்துள்ளது.

ஹாங்காங் தலைமை நிர்வாகி பதவி விலகுவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் மாதக்கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் ஹாங்காங்கும் பெய்ஜிங்கும் தலை சாய்ப்பதாக இல்லை. இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்ததால் மாணவர்களும் கொதிப்படைந்துள்ளனர்.

நேற்று 24வது வாரமாக போராட்டம் நடைபெற்றது.

கைது செய்யப்பட்ட ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்களில் மூன்று முக்கிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை விசாரணைக்கு வருமாறு போலிசார் உத்தரவிட்டுள்ளனர்.

இவர்கள் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். நேற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!