முக்குளிப்பாளர்களில் ஒருவரின் உடலைக் கண்டுபிடித்த மீனவர்கள்

ஜகார்த்தா: சிங்கப்பூரர் ஒருவர் உட்பட முக்குளிப்பாளர்கள் மூவர் காணாமல் போன நிலையில் சுமத்ரா தீவின் லம்புங் பகுதியை ஒட்டிய கடற்பகுதியில் அவர்களுள் ஒருவரின் உடலை இந்தோனீசிய மீனவர்கள் கண்டுபிடித்தனர்.

முக்குளிப்பு உடை அணிந்த நிலையில் அவர் இருந்ததையும் அவருக்கு அருகே முக்குளிப்பு உபகரணம் ஒன்று இருந்ததையும் மீனவர்கள் கண்டதாக இந்தோனீசிய தேடி மீட்கும் படையின் பேச்சாளர் யூசுஃப் லத்தீப் கூறினார்.

“காணாமல் போன முக்குளிப்பாளர்களில் ஒருவரது உடலே அது என உறுதி செய்யப்பட்டது. அவரது உடல் ஹெலிகாப்டர் மூலம் லம்புங்கில் இருந்து ஜகார்த்தாவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது,” என்று ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழிடம் சொன்னார்.

அந்த முக்குளிப்பாளர் எந்த நாட்டவர் எனத் தெரியவில்லை என்றும் கிழக்கு ஜகார்த்தா போலிஸ் மருத்துவமனையில் அவரை அடையாளம் காணும் பணி இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 3ஆம் தேதி வெளிநாட்டவர் அறுவர் இரு பிரிவுகளாக முக்குளிக்கச் சென்றனர். அவர்களுள் ஒரு பிரிவினர் மட்டும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து கடல் பரப்புக்குத் திரும்பினர். சிங்கப்பூரர் வாங் பின் யாங்கும் சின் சியூ தாவ், டியன் யூ என்ற சீனர்கள் இருவரும் காணாமல் போயினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!