ரசாயனத் தாக்குதல்: பாலர் பள்ளியில் 51 பிள்ளைகள் காயம்

பெய்ஜிங்: தென்மேற்கு சீனாவின் பாலர் பள்ளிக்குள் திடீரென புகுந்த ஓர் ஆடவர், அரிப்பை ஏற்படுத்தும் திரவத்தால் 50க்கும் அதிகமானோரைக் காயப்படுத்தியுள்ளார். காயமடைந்தோரில் பெரும்பாலானோர் சிறார்கள் என்று உள்ளூர் அதிகாரிகள் நேற்று (நவம்பர் 12ஆம் தேதி) தெரிவித்தனர்.

சந்தேக நபரான 23 வயது கோங், பாலர் பள்ளிச் சுவரின்மீது ஏறி மாணவர்களின் மேல் ‘சோடியம் ஹைட்ராக்சைட்’ ரசாயனத்தைப் பாய்ச்சியதாக யுனான் மாநிலத்தின் கையுவேன் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் திங்கட்கிழமை பிற்பகல் 3.35 மணிக்கு நேர்ந்ததாக அதிகாரிகள் வெய்போ தளத்தின்மூலம் தெரிவித்தனர். கிட்டத்தட்ட 51 குழந்தைகளும் மூன்று ஆசிரியர்களும் மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இருவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் ஆவதற்கு முன்பே போலிசார் கோங்கைக் கைது செய்தனர்.

“சிறு வயதில் அவரது பெற்றோர் விவாகரத்து செய்ததால் குடும்ப அரவணைப்பின்மையால் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்,” என்றனர் உள்ளூர் அதிகாரிகள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!