புதர்த் தீ: 50க்கும் அதிகமான வீடுகள் சேதம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் நேற்று குளிர்ச்சியான வானிலை நிலவியதன் காரணமாக அங்கு பரவி வரும் புதர்த் தீயை அணைப்பதற்கு தீயணைப்பாளர்களின் பணி சற்று எளிமையாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் பரவிய புதர்த் தீயால் இதுவரை ஏறத்தாழ 50 வீடுகள் எரிந்துவிட்டன. அங்கு கிட்டத்தட்ட 80 இடங்களில் இன்னும் தீ எரிந்துகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், வடகிழக்கு மாநிலமான குவீன்ஸ்லாந்தில் காற்றின் திசை மாறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் தீயின் தாக்கம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கிட்டத்தட்ட 1,000 கிலோ மீட்டர் சுற்றளவில் எரிந்துகொண்டிருக்கும் தீயை அணைக்க, தீயணைப்பாளர்கள் பல நாட்களாக கடுமையாகப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், புதர்த் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!