பொலிவியாவின் இடைக்கால அதிபராகத் தன்னை பிரகடனப்படுத்திக்கொண்ட செனட்டர்

லா பாஸ்: பொலிவியாவின் எதிர்க்கட்சி செனட்டர் ஜெனின் ஆஞ்யெஸ், தன்னை அந்நாட்டின் இடைக்கால அதிபராக பிரகடனப்படுத்திக்கொண்டார்.

முன்னாள் அதிபர் இவோ மொராலெஸ் பதவியிலிருந்து விலகியதை அடுத்து திருவாட்டி ஆஞ்யெஸின் இந்த அறிவிப்பு நேற்று வெளிவந்தது. இதன் தொடர்பிலான நாடாளுமன்றக் கூட்டத்தை திரு மொராலெஸின் கட்சியினர் புறக்கணித்ததால் இந்தப் புதிய நியமனத்திற்குத் தேவையான குறைந்தபட்ச வாக்குகள் சேரவில்லை. இருந்தபோதும், பொலிவியாவின் அரசமைப்புச் சட்டத்தின்படி அதிபருக்கு அடுத்த நிலையில் தாம் இருப்பதாகத் தெரிவித்த திருவாட்டி ஆஞ்யெஸின், விரைவில் பொதுத்தேர்தலை நடத்த உறுதி கூறியுள்ளார்.

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறிய முன்னாள் அதிபர் மெக்சிகோவில் அடைக்கலம் புகுந்துள்ளார். சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தல் முடிவு குறித்து பல வாரங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற பிறகு அவர் பதவியிலிருந்து விலகினார்.

“மக்கள் மேலும் ரத்தம் சிந்தக்கூடாது,” என்பதற்காகத் தாம் பதவியிலிருந்து விலகியதாக திரு மொராலெஸ் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!