1எம்டிபி நிதியத்தின் இறுதி தணிக்கை அறிக்கையில் சட்டவிரோதமான மாற்றங்களுக்கு உத்தரவிட்டதன்பேரில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
66வயது நஜிப், பிரதமராக இருந்தபோது தனக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகளைத் தவிர்க்க 1எம்டிபியின் இறுதி தணிக்கை அறிக்கையில் சில மாற்றங்களைச் செய்ய உத்தரவிட்டதாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் குற்றஞ்சாட்டப்பட்டார்.
1எம்டிபி வழியாக நஜிப்பும் அரசாங்க உயர் பதவியில் அப்போது இருந்த சிலரும் 4.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பொதுமக்கள் பணத்தைக் கையாடியதாகக் கூறப்படுகிறது.
இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் 1எம்டிபியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தாவும் இன்று விசாரிக்கப்படுவார்.