ஆஸ்திரேலியா: ஆக அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாகியாக இலங்கை பெண்மணி

ஆஸ்திரேலிய நிறுவனங்களில் தலைமை நிர்வாகிகளாகப் பணிபுரிவோரில் அதிக சம்பளம் பெறுகின்றவர்களின் பட்டியலில் முதலிடத்திலிருப்பவர் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட ஷெமாரா விக்ரமநாயகே எனும் பெண்மணி என்று ஆஸ்திரேலியாவின் ஃபைனான்சியல் ரிவ்யூ பத்திரிகை தெரிவித்துள்ளது.

தற்போது சிட்னியில் வசித்துவரும் அவர் மேக்குவாரி குழும நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆவார். கடந்த ஆண்டு இந்தப் பதவியில் சேர்ந்த இவரது சம்பளம், 18 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் என்றும் கூறப்பட்டது.

தலைமை நிர்வாகி சம்பள தரவரிசைப் பட்டியலில் ஒரு பெண் முதலிடம் பெற்றிருப்பது இதுவே முதல் தடவை என்றும் முதல் ஐம்பது இடங்களுக்குள் நான்கு பெண்கள்தான் இடம்பிடித்திருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

ஷெமாரா விக்ரமநாயகே லண்டனிலிருந்து சிட்னிக்கு புலம்பெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!