மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதுவின் கையெழுத்துடன் கூடிய ஆடம்பர கைக்கடிகாரங்களை வாங்க முனைந்த பத்துக்கும் மேற்பட்டோர் அப்படி ஒன்று அதிகாரபூர்வமாக இல்லை என்பதை உணரவில்லை. ஆயிரக்கணக்கான ரிங்கிட் பணத்தை அவர்கள் அளிக்கும் முன்னரே அது குறித்து எச்சரிக்கை வெளியிடப்பட்டுவிட்டது.
டாக்டர் மகாதீரே இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது. இப்படி ஒரு தகவல் வெளியானதை அறிந்ததும் விற்பனையை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டதாக பிரதமரின் உதவியாளர் கூறினார். அரசாங்க ஊழியர்களுக்கு விற்கப்படும் எந்தவொரு கடிகாரத்திலும் தமது கையெழுத்து இடம்பெற டாக்டர் மகாதீர் அனுமதி வழங்கவில்லை என அவர் கூறினார்.
கடிகார விற்பனை குறித்த விளம்பர கையேடு இரு வாரங்களுக்கு முன்னால் சில அரசு துறைகளின் ஊழி யர்கள் மத்தியில் வலம் வந்தது. ஆனால் அந்த விளம்பரம் பொய் என்று விசார ணைக்குப் பின்னர் தெரியவந்தது.