கல்யாணத்துக்கு நகைகள் மட்டுமல்ல; சீதனமும் 3 கூடை தக்காளிதான்

பாகிஸ்தானில் மணப்பெண் ஒருவர் 'தக்காளி நகைக'களைத் திருமணத்தின்போது அணிந்து பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

ஒரு கிலோ தக்காளியின் விலை 300 ரூபாயைத் தாண்யுள்ளது; சாமானிய மக்கள் தக்காளியை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உயர்ந்துவரும் தக்காளி விலையையும் தளர்ந்துவரும் பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலையையும் உலகத்தாருக்கு சுட்டிக்காட்டும் வகையில் பாகிஸ்தான் மணப்பெண் ஒருவர், தனது திருமண அலங்காரத்தில் தங்க நகைகளுக்குப் பதிலாக ‘தக்காளி நகை’களை அணிந்திருக்கிறார்.

கழுத்து, காது, கைகளில் தக்காளிப் பழங்களைக் கோத்து செய்யப்பட்ட நகையை அணிந்திருந்தார் அவர்.

தலையில் நெத்திச்சுட்டியாக ஒரு தக்காளிப் பழம் அலங்கரித்திருந்தது.

தங்கத்திற்கு நிகராக தக்காளியை ஒப்பிட்டிருந்த அவரது புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பகிரப்பட்டுவருகின்றன.

உள்ளூர் செய்தியாளர் ஒருவருடன் பேசிய மணப்பெண், தனது குடும்பத்தினர் தனக்கு திருமண சீதனமாக மூன்று கூடை தக்காளியைப் பரிசளித்திருப்பதாகக் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் தக்காளியின் விலை எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து தக்காளி இறக்குமதி தடை செய்யப்பட்டது விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

தக்காளியின் விலையைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!