14,500க்கு மேற்பட்ட ஆடுகளை ஏற்றிச் சென்ற கப்பல் கருங்கடலில் மூழ்கியது

ரோமானியாவிலுள்ள மிடியா துறைமுகத்திலிருந்து சவூதி அரேபியாவை நோக்கிக் கிளம்பிய ‘குவீன் ஹிண்ட்’ எனும் சரக்குக் கப்பல் ஒன்று கிளம்பிய சிறிது நேரத்துக்குள்ளேயே திடீரென கடலில் மூழ்கியது.

அதில் 14,500க்கும் அதிகமான ஆடுகள் ஏற்றிச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

அந்தக் கப்பலில் சிரியாவை சேர்ந்த மாலுமிகள் 22 பேர் இருந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) புறப்பட்ட அந்தக் கப்பல், சிறிது நேரத்திலேயே கவிழ்ந்தது. கப்பலில் இருந்த மாலுமிகளுடன் அனைத்து ஆடுகளும் நீரில் மூழ்கின.

இதையடுத்து, உள்ளூர் போலிசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் கடலோரக் காவல்படையினர் ஆகியோரை கொண்ட கூட்டு மீட்பு குழு தீவிர மீட்பு பணியில் இறங்கியது.

மாலுமிகள் 22 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கப்பலைச் சுற்றி நீந்திக்கொண்டிருந்த 33 ஆடுகளை மீட்பு குழுவினர் மீட்டனர். பெரும்பாலான ஆடுகள் கடலில் மூழ்கியிருக்கும் என்று கருதப்படுகிறது.
கப்பல் மூழ்கியதற்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விலங்குகளை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லும்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட அதிகாரிகள், அண்மைய சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!