நசிரியா: ஈராக்கில் அரசுக்கு எதிராக நடந்த வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 45ஆக உயர்வடைந்தது. 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
ஈராக்கின் தென் பகுதியில் இருக்கும் நஜஃப் நகரில் உள்ள ஈரானின் தூதரக அலுவலகத்தின் முன் புதன்கிழமை இரவு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் ஈரான் தூதரக அலுவலகக் கட்டடத் துக்குத் தீ வைத்தனர்.
தொடர்ந்து நடக்கும் வன்முறை காரணமாக ஈராக்கின் பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.