ஈராக்கில் தொடரும் வன்முறை: பிரதமர் பதவி விலகல்

பாக்தாத்: ஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அப்துல் மஹதி அறிவித்துள்ளார்.

அவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பாக்தாத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈராக்கில் ஊழல் அதிகரிப்பு, நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் இந்தக் காரணங்களால் அதிருப்தி அடைந்த மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக பல வாரங்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். கடந்த அக் டோபர் மாதம் முதல் ஈராக்கில் நடக்கும் போராட்டத்தில் 400க்கும் அதிகமானோர் பலியானதாகவும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

ஈராக்கில் நீடிக்கும் கலவரங்கள் குறித்து ஐநா. தலைமைச் செயலாளர் ஆண்டோனியோ குட்டரெஸ் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில் பிரதமர் பதவியிலிருந்து ஈராக்கிய பிரதமர் அப்துல் மஹதி விலகு வதாக தெரிவித்துள்ளார்.வெள்ளிக்கிழமை அப்துல் மஹதி பதவி விலகல் கடிதத்தை நாடாளு மன்றத்தில் சமர்ப்பித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. சென்ற ஆண்டு மே மாதம் அவர் பிரதமராக பொறுப்பேற்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!