தேர்தலை முன்னிட்டு நாடாளுமன்றத்தை முடக்கிவைத்த இலங்கை அதிபர்

கொழும்பு: இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி வரை ஒரு மாதக் காலத்துக்கு நாடாளுமன்றத்தை முடக்கிவைத்துள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த ஏதுவாக அவர் நாடாளுமன்றத்தை முடக்கிவைத்துள்ளதாக அறியப்படு கிறது. கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கை மக்கள் முன்னணி கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே, 70, கடந்த 18ஆம் தேதி அதிபராகப் பதவி ஏற்றார். புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நேற்று தொடங்க இருந்த நிலையில், தமது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் நாடாளுமன்றத்தை முடக்கிவைத்துள்ளார். தற்போது தனக்கு உள்ள ஆதரவு அலையைப் பயன்படுத்தி ஆறு மாதம் முன்னதாகவே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி, நாடாளுமன்றத்திலும் தனது கையை வலுப்படுத்த அவர் முடிவுசெய்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!