கோலாலம்பூர்: மலேசியாவில் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மிகவும் அதிகம் என்று புள்ளிவிவர கணக்கு காட்டுகிறது. இந்த ஆண்டில் இதுவரை 120,871 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு 2015ஆம் ஆண்டில் மொத்தம் 120,836 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு ஒவ்வொரு நாளும் சராசரியாக 330 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆண்டு இறுதியில் சுமார் 150,000 பேர் இக்காய்ச்சலால் பாதிக்கப்படக்கூடும் என்று சுகாதார துணை அமைச்சர் லீ பூன் சை கடந்த ஆகஸ்ட் மாதம் கூறியிருந்தார். டெங்கி காய்ச்சல் பற்றிய இணையப் பக்கத்தில் இந்த ஆண்டு டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. டெங்கி தொடர்பான பாதிப்புகளால் மலேசியாவில் இந்த ஆண்டு 164 பேர் மரணம் அடைந்ததாக புள்ளிவிவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
மலேசியாவில் டெங்கி பாதிப்பு இந்த ஆண்டு அதிகரிப்பு
6 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Dec 2019 10:11

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!