டிரம்ப்: சீனாவுக்குக் கடன் தருவதை நிறுத்தவும்

வாஷிங்டன்: சீனாவுக்குக் கடன் கொடுப்பதை நிறுத்துமாறு உலக வங்கிக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தும் சீனாவுக்குக் கடன் வழங்க உலக வங்கி நேற்று முன்தினம் முடிவெடுத்தது. சீனாவுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் வரை குறைந்த வட்டிக்குக் கடன் வழங்க உலக வங்கி முடிவு செய்தது.

“சீனாவுக்கு உலக வங்கி ஏன் கடன் கொடுக்கிறது? இது எப்படி சாத்தியமாகும்? சீனாவிடம் நிறைய பணம் இருக்கிறது. அப்படி இல்லாவிட்டால் பணத்தை அவர்கள் தயாரிப்பார்கள். கடன் கொடுப்பதை நிறுத்துங்கள்,” என்று அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டார்.

“சீனாவுக்கு உலக வங்கி கடன் கொடுப்பது வெகுவாகக் குறைந்துள்ளது.

“அமெரிக்கா போன்ற எங்களது பங்குதாரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சீனாவுக்குக் கொடுக்கப்படும் கடன் குறைந்துள்ளது.

“நாடுகள் பணக்கார நாடுகளானதும் அவற்றுக்குக் கடன் கொடுப்பதை நாங்கள் நிறுத்திக்கொள்கிறோம்,” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் மின்னஞ்சல் மூலம் உலக வங்கி தெரிவித்தது.

இது குறித்து வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!